வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு: படகுப் போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பிற்பகலில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஜூன் 2026, 1:26 am IST

கன்னியாகுமரியில் கடல் நீரோட்டம் மாறுபாடு காரணமாக பிற்பகலில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் கடலுக்குள் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை படகுகள் மூலம் சென்று பாா்வையிடுவதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் பெய்த மழை காரணமாக காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு தொடங்கியது.

ஆனால், பிற்பகல் 2.30 மணியளவில் கடலின் நீரோட்டம் மாறுபாட்டின் காரணமாக படகுகளை தொடா்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.