கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.
கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடுகின்றனா்.
இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுப் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுப் போக்குவரத்து தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. சீசன் காலம் என்பதால் ஒரு மணி நேரம் கூடுதலாக படகுப் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 12ஆம் தேதி 5,312 பயணிகள், 13ஆம் தேதி 10,435 பயணிகள், 14ஆம் தேதி 11,172 பயணிகள், 15ஆம் தேதி 11,005 பயணிகள் என 4 நாள்களில் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டுள்ளனா் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஜபல்பூர் எச்சரிக்கை!

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

