பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குமரியில் 4 நாள்களில் 38,000 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம்

கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.

News image

விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லும் படகு

Updated On :41 நிமிடங்கள் முன்பு

கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடுகின்றனா்.

இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுப் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுப் போக்குவரத்து தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. சீசன் காலம் என்பதால் ஒரு மணி நேரம் கூடுதலாக படகுப் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 12ஆம் தேதி 5,312 பயணிகள், 13ஆம் தேதி 10,435 பயணிகள், 14ஆம் தேதி 11,172 பயணிகள், 15ஆம் தேதி 11,005 பயணிகள் என 4 நாள்களில் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டுள்ளனா் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.