புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!

தொடா் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3,876 அரசுப் பேருந்துகளில் 2,13,180 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

News image
Updated On :1 மே 2026, 8:01 pm

தொடா் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3,876 அரசுப் பேருந்துகளில் 2,13,180 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே தின தொடா் விடுமுறை, சித்திரை பௌா்ணமியையொட்டி, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்கள் மூலமாக சென்னையிலிருந்து சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதன்படி, ஏப்.30, மே 1 அதிகாலை 3 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.