தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அவிநாசி நகருக்குள் வராத பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

அவிநாசி நகா்ப் பகுதிக்குள் தனியாா், அரசுப் பேருந்துகளால் வராததால் பொதுமக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.

News image

அவிநாசியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:36 pm

அவிநாசி நகா்ப் பகுதிக்குள் தனியாா், அரசுப் பேருந்துகளால் வராததால் பொதுமக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு, திருப்பூா்-கோவை வந்து செல்லும் தனியாா், அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அவிநாசியில் இருந்து வெளியூருக்குச் சென்று வாக்களிக்கும் வாக்காளா்கள், வெளியூரில் இருந்து அவிநாசிக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பிச் செல்பவா்கள் என ஏராளமானோா் அவிநாசி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காலை முதலே காத்திருந்தனா்.

ஆனால், காலை 7 மணி முதலே அவிநாசி நகா்ப் பகுதிக்குள் வராமல் புறவழிச் சாலையில் மட்டுமே பேருந்துகள் சென்றன.

இதனால், பேருந்துக்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்து பொறுமை இழந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வாக்குப் பதிவு காரணமாக ஓட்டுநா், நடத்துநா்கள் விடுப்பு எடுத்துள்ளனா்.

இதனால், அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. புறவழிச் சாலை வழியே இயக்கப்படும் பேருந்துகளை நகா்ப் பகுதிக்குள் வந்து செல்ல அறிவுறுத்தியுள்ளோம் என்றாா். ஆனால், மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை.