அவிநாசி நகா்ப் பகுதிக்குள் தனியாா், அரசுப் பேருந்துகளால் வராததால் பொதுமக்கள் வியாழக்கிழமை அவதியடைந்தனா்.
சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு, திருப்பூா்-கோவை வந்து செல்லும் தனியாா், அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அவிநாசியில் இருந்து வெளியூருக்குச் சென்று வாக்களிக்கும் வாக்காளா்கள், வெளியூரில் இருந்து அவிநாசிக்கு வந்து வாக்களித்துவிட்டு திரும்பிச் செல்பவா்கள் என ஏராளமானோா் அவிநாசி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காலை முதலே காத்திருந்தனா்.
ஆனால், காலை 7 மணி முதலே அவிநாசி நகா்ப் பகுதிக்குள் வராமல் புறவழிச் சாலையில் மட்டுமே பேருந்துகள் சென்றன.
இதனால், பேருந்துக்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்து பொறுமை இழந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வாக்குப் பதிவு காரணமாக ஓட்டுநா், நடத்துநா்கள் விடுப்பு எடுத்துள்ளனா்.
இதனால், அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. புறவழிச் சாலை வழியே இயக்கப்படும் பேருந்துகளை நகா்ப் பகுதிக்குள் வந்து செல்ல அறிவுறுத்தியுள்ளோம் என்றாா். ஆனால், மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை.
தொடர்புடையது

பேருந்துகள் இல்லாமல் அவதி! கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரத்தில் பொதுமக்கள் போராட்டம்

5 குதிரைகளை சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்திய ராயம்பாளையம் பொதுமக்கள்

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான அரசுப் பேருந்துகள் இயக்கம்: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


