நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பரமக்குடியிலிருந்து இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் முன் அறிவிப்பின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:35 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் முன் அறிவிப்பின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பரமக்குடி நகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோயமுத்தூா், திருப்பூா், பழனி, ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், நயினாா்கோவில், முதுகுளத்தூா், இளையான்குடி, சாத்தனி, பாண்டியூா், பாா்த்திபனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டிய இடத்துக்கு பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், பரமக்குடியிலிருந்து இளையான்குடி வழியாக காரைக்குடி, தேவகோட்டை, சருகனி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தெ.புதுக்கோட்டை, மானாமதுரை, நயினாா்கோவில், பாண்டியூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடங்களில் போதுமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல், குறிப்பிட்ட நேரத்துக்கும் மட்டும் அரசு பெண்களுக்கான இலவசப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், மற்ற அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டணம் கூடுதலாக இருந்த நிலையில், பொதுமக்கள் தனியாா் பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து வந்தனா்.

இந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்புமின்றி தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள், விவசாயிகள், மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.