இண்டிகோ விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இருளில் மூழ்கியதால் உள்ளே இருந்த 160 பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
குஜராத்தின் வதோதரா விமான நிலையத்திலிருந்து தில்லி செல்லவிருந்த இண்டிகோ 6இ 657 விமானம் மே 17 அன்று இரவு 8.40 மணியளவில் இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட மின் தடையால் மொத்தமாக இருளில் மூழ்கியது.
விமானத்திற்கு மின்சாரம் வழங்கும் ஜிபியு கருவியில் ஏற்பட்ட கோளாறால் இப்பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் விமான நிலையை பொறியாளர்கள் இதனைக் கண்டறிய 15 நிமிடங்கள் வரை ஆனது. அதனைச் சரிசெய்ய மேலும் 15 நிமிடங்கள் ஆனது.
ஜிபியு என்பது விமானம் நிறுத்தப்பட்டிருக்கையில் அதனுடன் இணைக்கப்படும் ஒரு கருவியாகும். இதன்மூலம், விமானத்தின் என்ஜின்கள் அல்லது உள்ளிருக்கும் ஜெனரேட்டரின் தேவையின்றி விளக்குகள், மின்னணு அமைப்புகள் மற்றும் ஏசி போன்றவற்றை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் வழங்கப்படும்.
இதில் ஏற்பட்ட பாதிப்பால் விமானம் முழுவதும் 30 நிமிடங்களுக்கு மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏசி மற்றும் மின் விளக்குகள் வேலை செய்யாமல் விமானத்துக்குள்ளிருந்த 160 பயணிகள் அவதிக்குள்ளாகி இருளில் தவித்துள்ளனர்.
இதுபற்றி இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இயந்திரக் கோளாறு காரணமாக 6இ 657 விமானம் தாமதமாகக் கிளம்பியது. பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட்ட நிலையில் விமானம் தில்லி நோக்கிப் புறப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கோளாறால் 8.40-க்கு புறப்படவேண்டிய விமானம் 10 மணிக்கும் புறப்பட்டது.
Summary
Aircraft Plunges into Darkness Due to Mechanical Failure! Passengers Suffer!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
தொழில்நுட்ப கோளாறு துபை புறப்பட்ட விமானம் தரையிறக்கம்
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



