என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்ததால், தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் சனிக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 160 பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து புது தில்லிக்கு 160 பேருடன் சனிக்கிழமை பயணித்த இண்டிகோ விமானத்தின் (போயிங் 737) என்ஜின்களில் ஒன்று, அந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக செயலிழந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளின்படி புது தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானத்தில் உரிய பரிசோதனைகள் மற்றும் பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?
இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

