சென்னை வந்த விமானத்தில் அவசர கால கதவு வழியாக குதித்து ஓடிய பயணியைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாா்ஜாவில் இருந்து ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.25-க்கு 217 பயணிகளுடன், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. ஓடு பாதையில் ஓடி நிற்பதற்கு தயாரானபோது, அந்த விமானத்தில் இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்ற பயணி, திடீரென விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து, வெளியே குதித்து ஓடினாா்.
உடனடியாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசர கால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள், தப்பி ஓடிய பயணி முகமதுவை சுற்றி வளைத்துப் பிடித்து தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா்.
விசாரணையின்போது, அந்தப் பயணி மனநிலை பாதிக்கப்பட்டவா்போல் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஏதேனும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரா என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இச்சம்பவம் காரணமாக சென்னையில் இருந்து மீண்டும் சாா்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக காலை 7.45-க்கு புறப்பட்டுச் சென்றது.
தொடர்புடையது

பயன்பாட்டுக்கு வந்தது நொய்டா சா்வதேச விமானநிலையம்: நிலம் வழங்கிய விவசாயிகள் முதல் விமானத்தில் பயணம்

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நெல்லையில் அவசர கால ஒத்திகை

தவெக அரசுக்குக் கால அவகாசம் தேவை: துரை வைகோ!

சென்னையில் தரையிறங்கிய விமானத்தில் அவசரகால கதவைத் திறந்த பயணி கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



