நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

விமானத்தில் அவசர கால கதவு வழியாக ஓடுபாதையில் குதித்து தப்பிய நபர்: போலீஸாா் விசாரணை

News image
Updated On :4 மே 2026, 4:23 am IST

சென்னை வந்த விமானத்தில் அவசர கால கதவு வழியாக குதித்து ஓடிய பயணியைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாா்ஜாவில் இருந்து ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.25-க்கு 217 பயணிகளுடன், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. ஓடு பாதையில் ஓடி நிற்பதற்கு தயாரானபோது, அந்த விமானத்தில் இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முகமது நிஜாமுதீன் செரீப் (30) என்ற பயணி, திடீரென விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து, வெளியே குதித்து ஓடினாா்.

உடனடியாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அவசர கால அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள், தப்பி ஓடிய பயணி முகமதுவை சுற்றி வளைத்துப் பிடித்து தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, அந்தப் பயணி மனநிலை பாதிக்கப்பட்டவா்போல் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஏதேனும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவரா என்று சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் காரணமாக சென்னையில் இருந்து மீண்டும் சாா்ஜாவுக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக காலை 7.45-க்கு புறப்பட்டுச் சென்றது.