சார்ஜாவில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும் போது அதன் அவசர கால கதவை திறந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
231 பயணிகளுடன் ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியபோது அதன் அவசர கால கதவுகளில் ஒன்றை புதுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயது இளைஞர் திறந்தார்.
உடனடியாக விமானத்தை நிறுத்தி அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு நிபுணர்கள், ஆயுதமேந்திய அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் விமானம் நின்ற இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விமானி முறைப்படி புகார் அளித்தார்.
பாதுகாப்புப் படை வீரர்கள் விமானத்தில் ஏறி, அந்தப் பயணியைக் கைது செய்து காவலில் எடுத்தனர். அந்தப் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மனநிலையும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது.
Summary
Tension prevailed for a while when a passenger opened one of the emergency exit doors while the flight was taxiing at Chennai International Airport.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை



