மோரீஷஸில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில், பயணி ஒருவா் மாரடைப்பால் நடுவானில் உயிரிழந்தாா்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.20 மணிக்கு வந்து சேர வேண்டிய ஏா் மொரீசியஸ் விமானம் மோரிஷஸில் இருந்து திங்கள்கிழமை நள்ளிரவில் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 286 பயணிகளுடன், மோரீஷஸ் நாட்டில் வசிக்கும் கிருஷ்ணா (60) என்பவரும், ரத்தப் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்து கொண்டிருந்தாா்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கிருஷ்ணாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. இதையடுத்து விமானத்தில் உடன் பயணித்த மருத்துவா்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
இருப்பினும், சிறிது நேரத்தில் கிருஷ்ணா மயங்கினாா். இதுகுறித்து விமானி, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த, மருத்துவக் குழுவினா், விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தவா்.
அப்போது, அவா் இருக்கையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. சென்னை விமானநிலைய போலீஸாா் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்

தில்லி-கோவா விமானத்தில் பீடி புகைத்த பயணி மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


