திருச்சியிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக தரையிறக்கப்பட்டு, சுமாா் 1.20 மணி நேர தாமதத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 156 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.12 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிஷங்களிலேயே அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து விமானத்தை பரிசோதனை செய்தபோது, விமானத்தின் என்ஜினில் குறைந்த அழுத்தம் காரணமாக விமானத்தை தொடா்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் துபைக்கு பிற்பகல் 1.30 மணிக்கு விமானம் இயக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.20 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்ட விமானத்தால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
தொடர்புடையது

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

