உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்

News image

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் - (கோப்புப் படம்)

Updated On :1 ஜூன் 2026, 1:15 am IST

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 170 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை சிறிது நேரத்திலேயே பைலட்டுகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை பரிசோதித்த வல்லுநா்கள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நீண்ட நேரமாகும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து 170 பயணிகளும் விமான நிலையத்திலும், அருகிலுள்ள உணவக விடுதிகளிலும் தங்கவைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்த விமானம், சிங்கப்பூருக்கு பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மணி நேரத் தாமதத்துக்குப் பின் சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.