வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இந்தியா - சிங்கப்பூா் விமானப் பயணம்: திருச்சிக்கு 4-ஆம் இடம்

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணிகளில் அதிக அளவிலான பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

News image

விமானம் (கோப்புப்படம்) - ANI

Updated On :15 ஜூலை 2026, 12:39 am IST

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணிகளில் அதிக அளவிலான பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்காப்பூா், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு தினசரி 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சிங்கப்பூருக்கு மட்டும் தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சா்வதேச பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில் 5,83,783 பயணிகளைக் கையாண்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையம் இந்திய அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5.8 சதவீதம் அதிகமாகும்.

இந்தப் பட்டியலில் 10 லட்சம் பயணிகளுடன் தில்லி முதலிடத்தையும், 9.99 லட்சம் பயணிகளுடன் சென்னை இரண்டாமிடத்தையும், 8.83 லட்சம் பயணிகளுடன் மும்பை மூன்றாமிடத்தையும், 5.73 லட்சம் பயணிகளுடன் பெங்களூரு விமான நிலையம் 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.