பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

காலமானார் பட்டுக்கோட்டை குமாரவேல்

நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான பட்டுக்கோட்டை குமாரவேல் (96), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை திருவான்மியூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

Published On :27 ஜனவரி 2024, 10:47 pm IST


சென்னை: நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான பட்டுக்கோட்டை குமாரவேல் (96), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை திருவான்மியூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.  
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ராஜமடத்தில் 1925}ஆம் ஆண்டு பிப்.26}இல் பிறந்த பட்டுக்கோட்டை குமாரவேல், 1947}ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலைய கலைஞராகப் பணியில் சேர்ந்தார். அவர் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் உயர் நிலை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும் 36 ஆண்டுகள் பணியாற்றினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நாடகங்களை எழுதி, தயாரித்துள்ளார். 
20}க்கும் மேற்பட்ட நூல்களையும், 40}க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றவர். அவரின் நாடகங்களைப் பாராட்டி, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தார்.  
பட்டுக்கோட்டை குமாரவேல் எழுதிய "வானொலி நிகழ்ச்சிக்கலை' என்ற நூல், அவருக்கு அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுத் தந்தது. 
அவருடைய வரலாற்று நாடகங்களான "புத்தர் பெருமான்', "சிலுவை நாயகன்', " ஸ்ரீ ராமானுஜர்', "வள்ளலார் திரு அருட்பிரகாசர்'ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலராகவும் குமாரவேல் பொறுப்பு வகித்திருந்தார். 
அவருக்கு துரைபாண்டியன் என்ற மகனும், சாந்தி தணிகாசலம், கண்ணம்மாள் சோமசுந்தரம் ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அவரின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
தொடர்புக்கு... 9840387601.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.