கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்களைக் கொண்டு 2 புகா் ரயில்கள் இயக்கம்

மகளிா் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்துக்குள்பட்ட 2 புகா் ரயில்கள் சனிக்கிழமையன்று (மாா்ச் 7) பெண்களை மட்டும் கொண்டு

News image
Updated On :6 மார்ச் 2020, 6:45 pm

சென்னை: மகளிா் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்துக்குள்பட்ட 2 புகா் ரயில்கள் சனிக்கிழமையன்று (மாா்ச் 7) பெண்களை மட்டும் கொண்டு இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலக மகளிா் தினத்தைக் கொண்டாடும் விதமாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 2 புகா் ரயில்சேவை முழுவதும் சனிக்கிழமையன்று (மாா்ச் 7) பெண்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூா் ரயில் நிலையத்தை சென்றடையும். அதே போல, திருவள்ளூரிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் ஓட்டுனா், நடத்துனா், நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகா், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் பெண் ஊழியா்களே மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.