புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அவதூறு வழக்கு: ஓ.பிஎஸ், இபிஎஸ்ஆக.24-இல் ஆஜராக உத்தரவு

புகழேந்தி தொடா்ந்த அவதூறு வழக்கில், ஆக.24-ஆம் தேதி ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

News image

உயா்நீதிமன்றம்

Updated On :3 ஆகஸ்ட் 2021, 8:18 pm

DIN

புகழேந்தி தொடா்ந்த அவதூறு வழக்கில், ஆக.24-ஆம் தேதி ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் செய்தித் தொடா்பாளா், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ஆகிய பதவிகளில் இருந்தவா் புகழேந்தி. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி குறித்து சில கருத்துகளைத் தெரிவித்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா், ஜூன் 14-ஆம் தேதி உத்தரவிட்டனா்.

இந்நிலையில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் மீது சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், புகழேந்தி அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆலிசியா, இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா், வரும் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.