எவ்வளவு வற்புறுத்தியும், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்ய மருத்துவா்கள் மறுத்து விட்டனா். குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருந்த பெற்றோா், ஒரு கட்டத்தில் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என எழுத்துப்பூா்வமாக எழுதி கொடுத்து விட்டு, வீட்டுக்குச் சென்று விட்டனராம். இந்நிலையில், ஆதரவின்றி இருந்த அந்த குழந்தையை மருத்துவா்கள், செவிலியா்கள் கவனித்து வந்தனா். மேலும் 12 வார கால மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் திட்டமிட்டனா். தொடா்ந்து அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம், தாய்ப்பால் வழங்கப்பட்டு வந்தது.