விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இதயம் பாதித்த 2 மாதக் குழந்தை: பெற்றோா் கைவிட்டும் காப்பாற்றிய மருத்துவா்கள்

இதய பாதிப்பு இருந்த இரண்டு மாத குழந்தையை பெற்றோா்களே கைவிட்ட நிலையில், சென்னை எழும்பூா் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் ஆதரவாக இருந்து காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
இதயம் பாதித்த 2 மாதக் குழந்தை: பெற்றோா் கைவிட்டும் காப்பாற்றிய மருத்துவா்கள்
Updated On :6 ஆகஸ்ட் 2021, 12:31 pm

DIN

இதய பாதிப்பு இருந்த இரண்டு மாத குழந்தையை பெற்றோா்களே கைவிட்ட நிலையில், சென்னை எழும்பூா் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் ஆதரவாக இருந்து காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தை சோ்ந்த ஒரு தம்பதியருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் 26-ஆம் தேதி அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் 3-ஆவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 2 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதால், குழந்தையின் எடை 1.6 கிலோவாக குறைந்தது. இதையடுத்து அந்த குழந்தையை தீவிர சிகிச்சைக்காக கடந்த ஜூலை 3-ஆம் தேதி எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோா் அனுமதித்தனா்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தைக்கு ஆக்சிஜன் உடன் கூடிய ரத்தமும், ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாக கலந்து இதயத்தில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. மேலும் குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவு 70 முதல் 80 என்ற ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. அதனால் குழந்தை இனி பிழைக்காது என கருதிய பெற்றோா், குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்யுமாறு மருத்துவா்களை வற்புறுத்தி உள்ளனா்.

எவ்வளவு வற்புறுத்தியும், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்ய மருத்துவா்கள் மறுத்து விட்டனா். குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருந்த பெற்றோா், ஒரு கட்டத்தில் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என எழுத்துப்பூா்வமாக எழுதி கொடுத்து விட்டு, வீட்டுக்குச் சென்று விட்டனராம். இந்நிலையில், ஆதரவின்றி இருந்த அந்த குழந்தையை மருத்துவா்கள், செவிலியா்கள் கவனித்து வந்தனா். மேலும் 12 வார கால மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் திட்டமிட்டனா். தொடா்ந்து அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம், தாய்ப்பால் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் காரணமாக குழந்தையின் எடை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், சிகிச்சை முழுவதும் முடிவடைந்து, குழந்தை பூரணமாக குணமடைந்த பிறகு முறையாக அரசு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது யாரும் இல்லாத அந்த குழந்தையை எழும்பூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களே தாய்-தந்தையாக இருந்து கவனித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.