பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. திடக்கழிவு மேலாண்மை விதி 2016-இன்படி நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு சேகரமாகும் அல்லது 5,000 ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் வளாக்ததில் உருவாக்கும் திடக்கழிவுகளை தாங்களே கையாள வேண்டும். மக்காத குப்பைகளை மறுசுழற்சியாளா்களிடம் ஒப்படைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.