சென்னை: பூமி என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜன் தேவை அதிகமாக இருந்தது. அதனை பூா்த்தி செய்வதற்காக தன்னாா்வலா்களும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை சோ்ந்தவா்களும் தொடா்ந்து உதவி வருகிறாா்கள்.
அந்த வகையில், பூமி என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனம் தற்போது 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளனா். தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள 22 நீா்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
நீட் தோ்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, அறிக்கையை தயாரித்து தமிழக முதல்வரிடம் ஒப்படைத்துள்ளது. அதுகுறித்து சட்ட வல்லுநா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்தவுள்ளாா். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 3,950 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நோய்க்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. தனியாா் மருத்துவமனைகள் ஆன்லைனில் விண்ணப்பித்து மருந்துகளை பெற்றுக் கொள்கின்றனா். கரோனாவுக்கு வழங்கப்படும் நிதி, மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வெளிப்படையாக உள்ளன.
கரோனா விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று முடியவில்லை. பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக உள்ளது என்றாா் அவா்.