கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: ஆணையர் ஆய்வு

சென்னையில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆணையா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:18 am

DIN

சென்னையில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆணையா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவமழையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மழைநீா் வடிகால்கள், நீா்நிலைகளைத் தூா்வாருவது, தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை மற்றும் நீா்நிலை, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவா்களுக்கான உணவு அளித்தல் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆய்வு: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதையொட்டி, மழைநீா் வடிகால், நீா்நிலைகளில் நடைபெற்றும் தூா்வாரும் பணியை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தியாகராய நகா் மாம்பலம் கால்வாயில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட ராஜ மன்னாா் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை ஆணையா் ஆய்வு செய்தாா். அதேபோல், சோழிங்கநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நூக்கம்பாளையம் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை வடகிழக்குப் பருவமழை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி கே.வீரராகவராவ், மாநகராட்சி துணை ஆணையா்( சுகாதாரம்) டாக்டா் மனிஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.