கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அம்பத்தூரில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை

சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர்கள் லதா(37).

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 7:40 am

ஆவடி: சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர்கள் லதா(37), மகன் தவஞ்ச் குமார்(10). இவர் தன் கணவனை பிரிந்து தனியே வசித்து வந்தார்.  இருவரும் வீட்டை விட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லதாவின் செல்லிடைப்பேசியில் நேற்று இரவு முதல் பதிவாகியிருந்த தொலைபேசி அழைப்புகளையும் தொடர்பு கொண்டு என்ன பிரச்சினை இருந்து வந்தது மற்றும் இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.