விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள், நிஃப்டி 320 புள்ளிகள் சரிந்துள்ளதைப் பற்றி...

News image

பங்குச்சந்தை..

Updated On :30 ஏப்ரல் 2026, 4:53 am

பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் முடிந்திருந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இன்று காலை (ஏப்.30) பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஏப்.30) காலை 10.10 மணியளவில் 1,050 புள்ளிகள் சரிந்து 76,449.28 ஆகவும், அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 317.60 புள்ளிகள் சரிந்து 23,860.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவை தொடர் சரிவுக்கு காரணமாக அமைந்திருப்பதாகப் பங்குச்சந்தை முதலீட்டு வியூக வகுப்பாளர்கள் கூறுகின்றனர்.

நிஃப்டி50-ல் ஐடி பங்குகள் மட்டும் கணிசமான லாபத்தை எட்டின. இன்போஸிஸ், விப்ரோ ஆகியவையும், கோல் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை கணிசமான லாபம் பார்த்தன.

ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஜியோ ஃபினான்சியல் சர்விஸ், அபோலோ ஆகியவை 1 முதல் 3 சதவிகித சரிவைச் சந்தித்தன. இண்டியோ விமான நிறுவனம் 4 சதவிகிதம் வரை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் ரூ. 94.82 என்ற அளவில் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று காலை 2.5 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் 120 டாலருக்கு மேல் விற்பனையாகி வருவதால், இன்று காலை 9 மணி நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா அதிகரித்து ரூ. 95.07 ஆக வர்த்தகமாகி வருகின்றது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான நிறுவன பங்குகள் உயர்வு, நிஃப்டி 24,000-க்கும் கீழ் வீழ்ச்சி ஆகியவை முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Summary

Sensex Today | Nifty falls further, falls below 23,850; Rupee falls to 95.27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.