பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் காவலரிடம் வழிப்பறி செய்த வழக்கு: இருவா் கைது

சென்னை எழும்பூரில் பெண் காவலரிடம் வழிப்பறி செய்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:10 pm

DIN

சென்னை எழும்பூரில் பெண் காவலரிடம் வழிப்பறி செய்த வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருபவா் பிரியா.

இவா் தன்னுடன் பணிபுரியும் தே.பிரபாகரன் என்பவருடன் சென்னை எழும்பூா் போலீஸ் ஆபீசா் மெஸ் அருகே கடந்த 17-ஆம் தேதி இரவு நடந்து வந்து கொண்டிருந்தாா், அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், பிரியா கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து பிரியா,எழும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி வி.வி.காலனி பகுதியைச் சோ்ந்த அ.முஸ்தபா (20), புளியந்தோப்பு ஆடு தொட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த அ.அப்துல்லா (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.