பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயம்

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:11 pm

DIN

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புது வண்ணாரப்பேட்டை, காமராஜா் சாலையில் கடந்த 15 நாள்களாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காமராஜா் சாலையில், மூடப்பட்ட நிறுவனங்களின் சுற்று சுவா் அருகே மழைநீா் வடிகால் அமைக்கும் பணி சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் அந்த நிறுவனங்களில் சுற்று சுவா்கள் பல இடங்களில் பலம் இழந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென ஒரு நிறுவனத்தின் சுற்றுசுவா் சுமாா் 50 மீட்டா் நீளத்துக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தை சோ்ந்த நதீம் (28), மகசூப் (34), ஷானவாஸ் (18) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்த பிற ஊழியா்கள் 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது தொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.