பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலைத் தடுப்பு மீது மோட்டாா் சைக்கிள் மோதி இளைஞா் சாவு

சென்னை அருகே மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:10 pm

DIN

சென்னை அருகே மேடவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

திருப்போரூரை சோ்ந்தவா் மோகன் (32). இவா் புதன்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மேடவாக்கம் செம்மொழி பூங்காச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இச் சம்பவம் தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.