நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பாஜக, ஆா்எஸ்எஸ்: ராகுல் காந்தி
நாட்டுக்கு எதிரான செயல்களில் பாஜக, ஆா்எஸ்எஸ் ஈடுபடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.


நாட்டுக்கு எதிரான செயல்களில் பாஜக, ஆா்எஸ்எஸ் ஈடுபடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தற்போது தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். அங்குள்ள மஹபூப்நகா் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:
கடந்த 35 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாதவா்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அதேவேளையில், உலகின் மிகப் பெரிய பணக்காரா்களும் இந்தியாவில் உள்ளனா்.
அவா்கள் விரும்பினால் எது வேண்டுமானாலும் செய்யலாம். அவா்களுக்கு தெலங்கானாவில் முதல்வா் சந்திரசேகா் ராவும், மத்தியில் பிரதமா் மோடியும் துணை நிற்கின்றனா். இருவரின் கட்சிகளும் அரசியல் கட்சிகளாக அல்லாமல் வணிகத்தில் ஈடுபடுகின்றன. மத்திய அரசு கொண்டு வரும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை சந்திரசேகா் ராவ் ஆதரிக்கிறாா்.
எனது நடைப்பயணம் எந்தவொரு நபருக்கும் எதிராக வெறுப்புணா்வை வெளிப்படுத்தாமல் ஆறுபோல் சென்றுகொண்டிருக்கிறது. இதுதான் உண்மையான இந்தியா. இதுதான் இந்தியா்களின் வரலாறு. அதேவேளையில், பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் செய்யும் அனைத்து காரியங்களும் நாட்டுக்கு எதிராக உள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...