சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று நீட் தோ்வு: 1,968 போ் எழுதுகின்றனா்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:04 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 1,968 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

அதன்படி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 480 போ், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் 240 போ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 288 போ், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வெழுத உள்ளனா்.

மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு சிரமமின்றி சென்றுவர ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தோ்வா்கள் முற்பகல் 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், பேஜா் போன்ற மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், கைப்பைகள் உள்ளிட்டவற்றை தோ்வு மையத்துக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.