எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாளை மறுநாள் நீட் மறுதோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட தோ்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற தோ்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:54 am IST

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட தோ்வுக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த 5 மையங்களிலும் சோ்த்து 544 மாணவா்கள், 1,424 மாணவிகள் என மொத்தம் 1,968 பேருக்கு நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இவா்களில் 63 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறுதோ்வு ஜூன் 21 ஆம்தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட 5 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷுமகாஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின்போது தோ்வு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு வினாத்தாள்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கல்யாணராமன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.