இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா், திருப்போரூா், திருக்கழுகுன்றம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, முதுகுளத்தூா், சேலம் மாவட்டம் கொங்கனாபுரம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், நாகமங்கலம் ஆகிய இடங்களில் 11 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலூரில் மண் ஆய்வுக் கூடம், மதுரை, பரமக்குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம் ஆகியனவும், நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பால்பண்ணைச்சேரியில் தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளன.