'அறிவு இருக்கிறதா?': டிவிட்டர் கேள்விக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை
By DIN | Published On : 09th December 2022 04:27 PM | Last Updated : 10th December 2022 04:57 PM | அ+அ அ- |

டிவிட்டர் புகைப்படம்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலையின் தடுப்பில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து காட்டமாக பதிவிட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் முக்கிய சாலைத் தடுப்பில் கொடிகள் நடப்பட்டிருப்பது குறித்து அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
ஏற்கனவே, பள்ளிக்கரணை அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் விழுந்து இளம்பெண் பலியான நிலையில், இவ்வாறு புயல் காற்று வீசக்கூடிய நாளில், கட்சிக் கொடியை வைத்திருப்பது தொடர்பாக அவர் தனது கேள்வியை எழுப்பும் விதமாக இந்த டிவிட்டர் பதிவை வைத்துள்ளார்.
அண்ணா!
— K.Annamalai (@annamalai_k) December 9, 2022
உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம்.
நன்றி! https://t.co/8gNmVM92aq
அதாவது, புயல் வரும் நாள் அன்று இப்படி பாஜக கொடியை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கொடி காற்றில் விழுந்து 4 பேர் செத்தா உங்களுக்கு என்ன ? தமிழக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் டிவிட்டரில் படத்துடன் மிகக் கட்டமாக பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
இதற்கு, பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, அண்ணா!. உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி! என்று மிகப் பொறுமையாக பதிலளித்துள்ளார்.
புகைப்படம்: ஜெயராம் வெங்கடேசன் டிவிட்டர் பக்கத்திலிருந்து