டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னை மாநகராட்சியைக் கண்டித்து ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட சிபிஐஎம்

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கேட்டு ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2023, 9:11 am

DIN

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கேட்டு ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர்.

சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் இந்தாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஜனகவள்ளி என்ற பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் இல்லாததாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும் ஜனகவள்ளி உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

Story image

அதேபோல், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வரும் மழைநீர் கால்வாய் பணியில் ஈடுபட்ட கனகராஜ், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த இரு வேறு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு பலமுறை சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் சென்னைம் மாநகராட்சியை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரிப்பன் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.