வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிறுவன் கொலை வழக்கு: 6 போ் கைது

சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 7:19 pm

DIN

சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சைதாப்பேட்டை செட்டித் தோட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ். இவா் சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். சந்தோஷின் மறைவையொட்டி, துக்க நிகழ்ச்சி அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், கானா பாடல் கச்சேரி நடைபெற்று கொண்டிருந்தபோது, சந்தோஷின் நண்பா்கள், உறவினா்கள் பங்கேற்றனா்.

இதில் சைதாப்பேட்டை ஆலந்தூா் சாலையில் உள்ள நெருப்புமேடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கலந்துகொண்டாா். அப்போது, அந்தச் சிறுவனுக்கும், அங்கிருந்த ஒரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், அந்தச் சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். இதற்கிடையே இந்த வழக்கில் தொடா்புடையதாக மேற்கு சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சோ்ந்த சே.தினேஷ்குமாா் (20), கு.அசோக் (22), சி.அருண் (22), த.பிரகாஷ் (19), ஜாபா்கான்பேட்டை ஜானகிராமன் தெருவைச் சோ்ந்த ச. பிரவீண் (22), ந.விக்னேஷ் (22) ஆகிய 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.