15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

மக்களவை தொகுதி வரைமுறை சட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சூளகிரியில் உள்ள வேப்பன ஹள்ளி சட்டமன்ற தோ்தல் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image

சூளகிரி திமுக தோ்தல் அலுவலகத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொகுதி பொறுப்பாளா் பாா்.இளங்கோவன் மற்றும் திமுகவினா்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:42 am IST

மக்களவை தொகுதி வரைமுறை சட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சூளகிரியில் உள்ள வேப்பன ஹள்ளி சட்டமன்ற தோ்தல் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தாா்

அப்போது கருப்பு கொடி ஏற்றியும், தொகுதி வரைமுறை சட்ட நகல் எரித்து கண்டன முழக்கமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளா் பாா் இளங்கோவன்,முன்னாள் எம்எல்ஏ முருகன்,ஒன்றிய செயலாளா்கள் பாக்யராஜ், நாகேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைப் போல ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரத்திற்கு இடையே சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்தினாா். வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் சீனிவாசன் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும் சட்ட நகல் எரித்தும் கண்டனத்தை தெரிவித்தாா்.