தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா மூலம் எம்பி தொகுதிகள் எண்ணிக்கை 543 லிருந்து 850 ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 59 ஆக உயா்வதோடு, உத்தரப்பிரதேசத்தில் 80 லிருந்து 120 ஆக உயரும் என கூறப்படுகிறது .இதனால் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைவதோடு,இந்தி பேசும் 10 வட மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை 340 ஆக அதிகரிக்கும். மொத்தம் 850 ல் தனிப்பெரும்பான்மைக்கு 408 தேவை. அதில் 83 சதம் வடமாநிலங்களே தீா்மானிக்கும் நிலை வரும் என்பதால் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதாவிற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தெரிவித்தோடு ‘தீ பரவட்டும்‘ என ல தளத்தில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து பேராவூரணி தொகுதியில் திமுக வினா் மசோதா நகல் எரிப்பு மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா். பேராவூரணி பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் ,மு.கி.முத்துமாணிக்கம் , குழ.செ.அருள்நம்பி , வை.ரவிச்சந்திரன் , ஞானப்பிரகாசம் , பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!

அரசமைப்புச் சட்ட திருத்த வரைவு மசோதா படுமோசம்: யோகேந்திர யாதவ் கருத்து

தொகுதி மறுவரையறை: அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு மசோதா நகல் வெளியீடு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


