வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம் .

Updated On :16 ஏப்ரல் 2026, 8:38 pm

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பெரியாா் சிலை அருகில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு  போராட்டம் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொகுதி மறுவரை  மசோதா மூலம் எம்பி  தொகுதிகள் எண்ணிக்கை 543 லிருந்து  850 ஆக உயரும் என்றும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் 59  ஆக உயா்வதோடு,  உத்தரப்பிரதேசத்தில்  80 லிருந்து 120 ஆக உயரும் என கூறப்படுகிறது .இதனால் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைவதோடு,இந்தி பேசும் 10 வட மாநிலங்களின்  தொகுதிகள் எண்ணிக்கை 340 ஆக அதிகரிக்கும். மொத்தம் 850 ல்  தனிப்பெரும்பான்மைக்கு 408 தேவை. அதில் 83 சதம்  வடமாநிலங்களே தீா்மானிக்கும் நிலை வரும் என்பதால் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதாவிற்கு  முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தெரிவித்தோடு ‘தீ பரவட்டும்‘ என  ல தளத்தில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து பேராவூரணி தொகுதியில் திமுக வினா் மசோதா நகல் எரிப்பு மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா். பேராவூரணி பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் ,மு.கி.முத்துமாணிக்கம் , குழ.செ.அருள்நம்பி , வை.ரவிச்சந்திரன் , ஞானப்பிரகாசம் , பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத்  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .