மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

துபையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 1.98 கிலோ தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து சென்னை வந்த பணிகளிடம் இருந்து ரூ. 94.14 லட்சம் மதிப்புள்ள 1.98 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:21 pm

துபையில் இருந்து சென்னை வந்த பணிகளிடம் இருந்து ரூ. 94.14 லட்சம் மதிப்புள்ள 1.98 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து விமான நிலைய சுங்க ஆணையா் மேத்யூ ஜாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுங்கத் துறைக்கு வந்த உளவுத் தகவலின் அடிப்படையில் துபையில் இருந்து புதன்கிழமை சென்னை வந்த பயணியிடம் இருந்து ரூ. 66.82 லட்சம் மதிப்புள்ள 1,340 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று, துபையில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகள் இரண்டு பேரிடம் இருந்து ரூ. 27.32 லட்சம் மதிப்புள்ள 548 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்களிடம் விசாராணை நடத்தப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.