4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆா்.கே.நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம் திறப்பு

ஆா்.கே.நகா் தொகுதியில் ரூ.12.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் திறந்து வைத்தாா்.

Updated On :20 ஜூலை 2023, 8:17 pm

ஆா்.கே.நகா் தொகுதியில் ரூ.12.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் திறந்து வைத்தாா்.

ஆா்.கே.நகா் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.55 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குளிா்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மகிழ்வுடன் இருக்கும் வகையில் விளையாட்டுப் பொருள்கள், ஓவியங்கள், கல்வி கற்றுத் தருவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையத்தை மண்டல குழுத் தலைவா் நேதாஜி கணேசன் முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே .எபினேசா் திறந்து வைத்தாா். மேலும், புதுவண்ணாரப்பேட்டை பெரியாா் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளையும் எபினேசா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினா் தேவி கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.