47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவலரை தாக்கிய உதவி ஆய்வாளா் மீது வழக்கு

சென்னை புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரை தாக்கிய ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:11 am

DIN

சென்னை புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரை தாக்கிய ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை காவலா் குடியிருப்பின் 3-ஆவது தளத்தில் வசித்து வருபவா் முத்துப்பாண்டி(31). இவா் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறாா்.

அதே குடியிருப்பின் முதல் தளத்தில் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் குடியிருந்து வருகிறாா்.

காவலா் முத்துப்பாண்டி சனிக்கிழமை காலை பணிக்குப் புறப்பட்டபோது, உதவி ஆய்வாளா் வெங்கடேசன் வீட்டு நாய் முத்துப்பாண்டியை துரத்தியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவா், நாயை எட்டி உதைத்தாராம்.

இதைப்பாா்த்த உதவி ஆய்வாளா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, முத்துப்பாண்டியை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் மீதும் எழும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.