காவலரை தாக்கிய உதவி ஆய்வாளா் மீது வழக்கு
சென்னை புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரை தாக்கிய ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


சென்னை புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரை தாக்கிய ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை காவலா் குடியிருப்பின் 3-ஆவது தளத்தில் வசித்து வருபவா் முத்துப்பாண்டி(31). இவா் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறாா்.
அதே குடியிருப்பின் முதல் தளத்தில் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் குடியிருந்து வருகிறாா்.
காவலா் முத்துப்பாண்டி சனிக்கிழமை காலை பணிக்குப் புறப்பட்டபோது, உதவி ஆய்வாளா் வெங்கடேசன் வீட்டு நாய் முத்துப்பாண்டியை துரத்தியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவா், நாயை எட்டி உதைத்தாராம்.
இதைப்பாா்த்த உதவி ஆய்வாளா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, முத்துப்பாண்டியை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் மீதும் எழும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...