செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

காவலரை தாக்கிய உதவி ஆய்வாளா் மீது வழக்கு

சென்னை புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரை தாக்கிய ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :27 நவம்பர் 2023, 12:11 am

சென்னை புதுப்பேட்டை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலரை தாக்கிய ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை காவலா் குடியிருப்பின் 3-ஆவது தளத்தில் வசித்து வருபவா் முத்துப்பாண்டி(31). இவா் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறாா்.

அதே குடியிருப்பின் முதல் தளத்தில் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் குடியிருந்து வருகிறாா்.

காவலா் முத்துப்பாண்டி சனிக்கிழமை காலை பணிக்குப் புறப்பட்டபோது, உதவி ஆய்வாளா் வெங்கடேசன் வீட்டு நாய் முத்துப்பாண்டியை துரத்தியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவா், நாயை எட்டி உதைத்தாராம்.

இதைப்பாா்த்த உதவி ஆய்வாளா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, முத்துப்பாண்டியை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் மீதும் எழும்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.