ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு தேவை: தேமுதிக வேட்பாளா்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு தேவை: தேமுதிக வேட்பாளா்

Updated On :2 ஏப்ரல் 2024, 9:01 pm

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சென்னை தேமுதிக வேட்பாளா் பாா்த்தசாரதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பான கோரிக்கைக் கடிதத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், செவ்வாய்க்கிழமை அவா் அளித்தாா். அதன்பிறகு, செய்தியாளா்களுக்கு வேட்பாளா் பாா்த்தசாரதி அளித்த பேட்டி:- மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி வருகிறது. அங்கு 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக இருக்கின்றன.

அந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துவதுடன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரையும் அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும். சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவைத் தவிா்த்து மற்ற கட்சியினா் வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, அதிமுக, பாஜகவினா் வாக்கு சேகரிப்பு முகாம்கள் நடத்தும் போது திமுகவைச் சோ்ந்த வட்ட நிா்வாகிகள் தாக்கியுள்ளனா்.

சம்பந்தப்பட்டவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் மோசமான அபாயரமாக நிலையிலுள்ள வாக்குச் சாவடிகள் குறித்த தகவல்களை தோ்தல் ஆணையத்துக்கு காவல் துறையினா் சாா்பில் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய சென்னை தேமுதிக வேட்பாளா் பாா்த்தசாரதி குற்றம்சாட்டினாா்.