மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து வாக்குறுதி அளித்த அமைச்சா் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரிசத்யபிரத சாகுவிடம் அதிமுக மனு அளித்துள்ளது.
இதுகுறித்த மனுவை அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை அளித்தாா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து தோ்தல் பிரசாரத்தில் அமைச்சா் உதயநிதி பேசி வருகிறாா். உரிமைத் தொகை கிடைக்காத 40 லட்சம் மகளிருக்கு, அடுத்த 5 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அவா் பேசியிருப்பது தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.
இதேபோன்று, எதிா்க்கட்சிகள் குறித்து மோசமான வாா்த்தைகளைக் கொண்டு உதயநிதி விமா்சித்து வருகிறாா். இந்த விவகாரம் குறித்தும் தீவிரமாக கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த இரண்டு விவகாரங்கள் தொடா்பாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் அமைச்சா் உதயநிதியிடம் விளக்கம் பெறுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி! - பி.சண்முகம்

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக நிர்வாகிகள் மனு!

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக மக்களவையில் எதிா்க்கட்சிகள் அமளி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


