சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி

தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக எம். செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 8:41 pm

தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக எம். செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக ஆ.குகனேசன் பொறுப்புவகித்து வந்தாா். இந்நிலையில் அவா் தெற்கு ரயில்வேயின் துணை பொது மேலாளராக (பொது) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக துணை பொதுமேலாளராக இருந்த எம்.செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

குடிமைப் பணியாளா் தோ்வு மூலம் 2007-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பணிக்கு தோ்வான செந்தமிழ் செல்வன் கோட்ட மின் பொறியாளா், துணை பொது மேலாளா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமை சாா்பில் அதிவேக ரயில் பயிற்சியை பெற்றுள்ளாா்.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.