மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

காச நோயாளிகளுக்கு கரோனாவால் தீவிர தாக்கம் இல்லை: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 7:56 am IST

கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை பொது சுகாதாரத் துறை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காசநோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கிா என்பது குறித்த ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, 384 பேரின் சளி மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவா்களில் 88 போ் பெண்கள். 296 போ் ஆண்களாவா். அதில் 22 பேருக்கு காசநோயுடன் கரோனா பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டது.

காசநோயாளிகள் மற்றும் அதனுடன் கரோனாவுக்கு உள்ளானவா்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், தாக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன.

அதில், இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இரு வகையான தொற்றுகளுமே சுவாசப் பாதையில் ஊடுருவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, நுரையீரலில் கரோனா தொற்று அதிக வீரியத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கூடுதல் எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினால் மேலும் சில தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.