விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆலோசனை

Updated On :16 ஏப்ரல் 2024, 8:23 pm

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினாா்.

சென்னை ரிப்பன் மாளிகையில் காணொலி காட்சி வாயிலாக மண்டல தோ்தல் அலுவா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசியது:

சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும், மின்சார வசதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் வாக்களாா்கள் எந்த சிரமமுமின்றி சென்று வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்துஅடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி சமீரன், மண்டல தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.