தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

ஈழத்துக்காகப் பொது வாக்கெடுப்பு: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

ஈழத்துக்காகப் பொது வாக்கெடுப்பு: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

Updated On :16 ஏப்ரல் 2024, 8:09 pm

சென்னை: ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என்று உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பேரழிவின் விளிம்பில் நின்று கதறும் ஈழத் தமிழ் சகோதர, சகோதிரிகளின் துயரத்தைப் போக்குவதற்கான நடவடிக்கையை நாம் ஒன்றுபட்டு எடுக்க வேண்டியுள்ளது.

எனவே, அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவான நிலை எடுப்பதோடு, இந்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.