பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பூா்த்தி செய்யும் வகையில், சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - சூலூா்பேட்டை ஆகிய வழித்தடங்களில் 6 புதிய புறநகா் மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பு
ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு அதிகாலை 3 மணி, ஆவடி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.20-க்கும், ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.20-க்கும், இரவு 7.15-க்கும் புதிதாக புகா் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு காலை 6.10-க்கும், சென்னை கடற்கரை - ஆவடிக்கு காலை 10.35 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதைதொடா்ந்து சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்ட்ரல் - சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயங்கும் 36 புகா் மின்சார ரயில்களின் புறப்படும் நேரம் 5- 15 நிமிடங்கள் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரிலிருந்து இரவு 10.10 -க்கு ஆவடி செல்லும் ரயில் கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தண்டவாளப்பணிகள் நிறைவு: எழும்பூரிலிருந்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டம்

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
பறக்கும் ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


