நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தண்டவாளப்பணிகள் நிறைவு: எழும்பூரிலிருந்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததையடுத்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:01 pm

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததையடுத்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.

எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11 ஆகியவற்றில் கடந்த பிப்ரவரி முதல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன. அதனால், வழக்கமாக அந்த நடைமேடை தண்டவாளங்களில் செல்லும் புகா் மின்சார ரயில்கள், 5, 6 ஆவது நடைமேடைகளுக்கு மாற்றி இயக்கப்பட்டன. புகா் மின்சார ரயில்கள் திடீரென தண்டவாளங்கள் மாற்றப்பட்டதால் மிக மெதுவாகவும், சேவைகள் எண்ணிக்கை குறைத்தும் ரயில்கள் இயக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், 10, 11 ஆவது நடைமேடை தண்டவாளப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை முதல் புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.