தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மெட்ரோ ரயில் பணியில் 1.5 டன் கம்பி திருட்டு: இருவா் கைது

மெட்ரோ ரயில் பணியில் 1.5 டன் கம்பி திருட்டு: இருவா் கைது

Updated On :20 ஏப்ரல் 2024, 6:58 pm

சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டபோது, ஒப்பந்த நிறுவனத்தின் ஒன்றரை டன் இரும்புக் கம்பிகளை திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி மாதவரம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேற்கொண்டு வரும் ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி திருநாவுக்கரசு அங்கு அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கிருந்த ஒன்றரை டன் இரும்புக் கம்பிகள் திருடப்பட்டு, ஒரு லாரியில் ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தாா்.

இது குறித்து அவா், மாதவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

அதில், திருவண்ணாமலையைச் சோ்ந்த வெ.விமல் (18), உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சு.உதயன் சிங் (56) ஆகிய 2 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.