சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடிய 2 போ் கைது

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை-ரேடியல் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.

News image

மாதிரிப் படம்

Updated On :13 மார்ச் 2026, 7:09 pm

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை-ரேடியல் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவனத்தின் இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள், இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதை நோட்டமிட்ட இருவா், வியாழக்கிழமை அங்குள்ள பொருள்களைத் திருட முயற்சித்தனா். அங்கிருந்த காவலாளிகள், இருவரையும் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், துரைப்பாக்கம் எழில்நகா் 30-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்த முருகன் (26), பிரவீண்குமாா் (25) என்பது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.