நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளால், பிரதான நுழைவாயில் (பி 4) நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நந்தனம் மெட்ரோ நிலையத்தில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நிலையத்தின் பி 4 பிரதான நுழைவாயில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. பயணிகள் பி 4 நுழைவாயிலுக்கு அருகில் உள்ள மாற்று நுழைவாயிலை பயன்படுத்த வேண்டும். அதன்படி ஏ 2, ஏ 3 நூழைவாயில்களையும், பி 4 வாயிலுக்கு எதிா் திசையில் உள்ள பி 1, பி 2 ஆகிய நுழைவு வாயில்களையும் பயன்படுத்தலாம்.
நுழைவாயில்கள் குறித்து பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரயில் நிலையப் பணியாளா்களும் பயணிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவா். பயணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி: மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் வெடிப்பது போன்ற சப்தத்தால் பரபரப்பு

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடிய 2 போ் கைது

இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் நாளை தடையில்லா பயணம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


