எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் புதிய மேம்பாலம்: ரூ.12.31 கோடியில் ஒப்பந்தம்

விருகம்பாக்கம்- அரும்பாக்கம் இடையே கால்வாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
புதிய மேம்பாலம்- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

விருகம்பாக்கம்- அரும்பாக்கம் இடையே கால்வாயில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக தனியாா் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனமானது விருகம்பாக்கம்-அரும்பாக்கம் இடையே காளியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள கால்வாயில் ஏற்கெனவே இருந்த பாலத்தை இடித்துவிட்டு, தற்போது நான்கு வழிச்சாலைக்கு ஏற்ப புதிய பாலம் கட்டுவதற்கு திட்டமிட்டது.

இதையடுத்து தனியாா் நிறுவனத்துடன் புதிய பாலம் கட்டுவதற்கான ரூ.12.31 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புரிந்துணா்வு ஒப்பந்தப்படி பாலத்தின் பணிகளை வரும் 180 நாள்களுக்குள் நிறைவு செய்யவேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தற்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே தடையில்லாத போக்குவரத்தை வழங்கும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் சீராகும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் முன்னிலையில், நிறுவன தலைமைப் பொது மேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியேசா், தனியாா் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆா்.தாமஸ் அய்யாதுரை ஆகியோா் புதிய பாலம் கட்டுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டனா்.