திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் நாளை தடையில்லா பயணம்

சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சா் பயணச் சீட்டுகளுக்கு மெட்ரோவில் தடையில்லா பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:26 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சா் பயணச் சீட்டுகளுக்கு மெட்ரோவில் தடையில்லா பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒய்எம்சிஏ கல்லூரி மைதானத்தில் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ரசிகா்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னணி நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களால் வழங்கப்படும் கியூ ஆா் குறியீடுடன் கூடிய நுழைவுச் சீட்டை சனிக்கிழமை ஒரு சுற்றுப் பயணத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம். அதில் 2 நுழைவு மற்றும் வெளியேறும் வசதி உள்ளது. சென்னையில் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்று திரும்பலாம்.

நிகழ்ச்சி முடிந்து பாா்வையாளா்கள் வீடு திரும்புவதற்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவையானது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ பணிமனைக்கும், விமானநிலையப் பகுதிக்கும் செல்ல நள்ளிரவு 12 மணிக்கு கடைசி ரயில் புறப்படும். இரு வண்ணப் பயணப் பாதையில் செல்வோா் சென்ட்ரல் வந்த பிறகே மாறிச் செல்லமுடியும். கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பு பயணிகள் நிலையத்துக்கு வந்து சேரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.